செவ்வாய், அக்டோபர் 05, 2010

மாஸ்கோவின் காவிரியில் ஒரு வசனம்

"நிறுத்துங்க.. நிறுத்துங்க...அவரையும் ஏத்திக்கலாம்". டேக்சியில் ஒரு பெரியவரை இரு இளைஞர்கள் ஏற்றிக்கொள்கின்றனர்.

"ஏண்டாப்பா என்ன படிக்கிற?"

"தாத்தா.. நான் படிச்சு முடிச்சிட்டேன். engineer"

"அப்படியா... நல்லது... இந்த ஊர்ல ஒரு குளம் கட்டு... கால் கழுவ கூட தண்ணி இல்ல.. வெளியூர்ல இருந்துதான் கொண்டு வர வேண்டியிருக்கு"

"தாத்தா.. அது என்னால முடியாது... "

"அப்ப எதுக்குப்பா இந்த engineer வேல?"

"நாங்கல்லாம் foreign company-ல வேலை பாக்குறோம்"

"அப்ப அது நமக்கு ஒதவாத வேலையா?"

"இல்ல தாத்தா.. அவரு மாசம் லச்சக் கணக்குல சம்பளம் வாங்குறாரு"

கோபமாக "தண்ணி இல்லாம என்னடா பண்ணுறது... அத வச்சி ...................................!!!"

கருத்துகள் இல்லை: