வெள்ளி, செப்டம்பர் 10, 2004

உன்னைக் காணும் வரை...

எனக்கு தோல்வி பிடித்ததேயில்லை
உன்னைக் காணும் வரை!
ஆனால் இப்பொழுதோ
தோல்வி மட்டுமே பிடித்திருக்கிறது
போட்டியிடுவது உன்னிடம் என்றால்...!

எனக்கு கண்ணீர் பிடித்ததேயில்லை
உன்னைக் காணும் வரை!
ஆனால் இப்பொழுதோ
கண்ணீர் மட்டுமே பிடித்திருக்கிறது
அழுவது உன்னெஞ்சில்் என்றால்...!

எனக்கு கவிதை பிடித்ததேயில்லை
உன்னைக் காணும் வரை!
ஆனால் இப்பொழுதோ
கவிதையும் பிடித்திருக்கிறது
எழுதுவது உன்னைப் பற்றி என்றால்...!

எனக்கு பொய் சொல்ல பிடித்ததேயில்லை
உன்னைக் காணும் வரை!
ஆனால் இப்பொழுதோ
பொய்யும் கூட பிடித்திருக்கிறது
சொல்வது உனக்காக என்றால்...!