தமிழ் அளவைகளின் படி, ஒரு நாள் மற்றும் வருடம் அற்புதமாக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய முறைப்படி, ஒரு நாள் 24 ஆக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மணிநேரமும் 60 ஆக பிரிக்கப்படுகிறது (விநாடி). பின்பு ஒவ்வொரு விநாடியும் மேலும் 60 ஆல் பகுக்கப்பட்டு நொடி என்று வழங்கப்படுகிறது. இந்த நொடி என்பது தமிழ் அளவைகளின் படி தவறாகும்.
தமிழ் அளவைகளின்படி, ஒரு நாள் 60 ஆல் பகுக்கப்பட்டு 1 நாழிகை என வழங்கப்படுகிறது. பின்பு 1 நாழிகை 60 ஆக பிரிக்கப்பட்டு, 1 விநாடி எனவும், 1 விநாடி 24 ஆல் வகுபட்டு 1 உயிர் ஆகிறது.
2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 விநாடி - நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம் (30 நாள்) = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் (12 மாதம்) = 1 ஆண்டு
12 ஆண்டு = 1 மாமாங்கம்
5 மாமாங்கம் = 1 வட்டம்
இதன்படி ஒரு முறை நொடிக்கும் அளவு 1/4 of a second-ம் ஒரு முறை கண்ணிமைக்கும் நேரம் 1/16 of a second ஆகவும் வருகிறது. அதாவது, ஒரு செகண்ட்க்கு, 16 முறை கண்ணிமைக்க முடியும் போல தெரிகிறது. அறிவியல் ஆய்வின் படி, ஒரு முறை கண்ணிமைக்கும் நேரம் 300 millisecons i.e. ~1/3 of a second. இதில் யார் சரி என்று சொல்வது?